பிளே-ஆப் சுற்றுக்கு தெரிவாக 6 அணிகளுக்கிடையில் கடும் போட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்னும் 8 லீக் ஆட்டங்களே உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்திருக்கிறது.

மீதமுள்ள 3 பிளே-ஆப் சுற்று இடத்துக்கு 6 அணிகள் வரிந்துகட்டுகின்றன. இதனால் கடைசிகட்ட ஆட்டங்களின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: 12 ஆட்டங்களில் 8-ல் வெற்றிகளை குவித்துள்ள மும்பை அணி ரன்ரேட்டில் (+1.186) திடமாக இருப்பதால் அந்த அணியின் பிளே-ஆப் இடத்துக்கு ஆபத்து இல்லை. எஞ்சிய 2 ஆட்டங்களில் (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்துக்குள் வந்து விடலாம்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: 14 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் (ஐதராபாத், டெல்லிக்கு எதிராக) உள்ளன. இவற்றில் கட்டாயம் ஒன்றில் வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும். இரண்டிலும் வாகை சூடினால் எந்த சிக்கலும் இருக்காது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: கம்பீரமாக பயணித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முக்கியமான கட்டத்தில் தவிங்கி நிற்கிறது. கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்ததால் இப்போது பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. 12 ஆட்டங்களில் 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி அணி கடைசி 2 ஆட்டங்களில் (மும்பை, பெங்களூருக்கு எதிராக) வென்றாக வேண்டும். குறைந்தது ஒன்றில் வெற்றி பெற்றால் தான் வாய்ப்பில் நீடிக்க முடியும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 12 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி ரன்ரேட்டில் (-0.479) பின்தங்கியுள்ளது. அதனால் கடைசி 2 ஆட்டங்களிலும் (சென்னை, ராஜஸ்தானுக்கு எதிராக) ‘மெகா’ வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். ஒன்றில் தோற்றால் வாய்ப்பு மங்கி விடும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: 12 புள்ளிகளுடன் 4-வது இடம் வகிக்கும் பஞ்சாப் அணி ரன்ரேட்டை சரிய விடாமல் கடைசி 2 ஆட்டங்களிலும் (ராஜஸ்தான், சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றால் போதுமானது. இதில் ஒன்றில் கோட்டைவிட்டால் மற்ற அணிகளின் சாதகமான முடிவுக்காக காத்திருக்க வேண்டியது இருக்கும்.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி: 12 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 7-ல் தோற்றுள்ள ஐதராபாத் அணி கடைசி 2 ஆட்டங்களிலும் (பெங்களூரு, மும்பைக்கு எதிராக) முதலில் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் கடைசி கட்ட ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்போது தான் ஐதராபாத் அணிக்கு ‘பிளே-ஆப்’ கதவு திறக்கும். டெல்லி அணி தங்களது எஞ்சிய இரு லீக்கிலும் தோற்றால் அது ஐதராபாத்துக்கு இன்னும் சவுகரியமாக அமையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி கடைசி 2 லீக்கில் (பஞ்சாப், கொல்கத்தாவுக்கு எதிராக) வெற்றி காண வேண்டும். ஆனால் ராஜஸ்தானின் ரன்ரேட் (-0.505) மோசமாக இருப்பதால் கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத் அணிகள் தங்களது இறுதிகட்ட போட்டிகளில் ‘உதை’ வாங்கினால் தான் ராஜஸ்தான் அணி ‘பிளே-ஆப்’ அதிர்ஷ்டத்தை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles