பண்டாரவளை மாநகரின் பொது விற்பனை நிலையத்தில் மூவருக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பண்டாரவளை மாநகரம் முடக்கப்படலாமென்றும் தெரியவந்துள்ளது. தற்போது அது தொடர்பான கூட்டமொன்று நடைபெற்றுவருகின்றது.
தற்பேதைக்கு பண்டாரவளை மாநகர மரக்கறிசந்தைத் தொகுதிகாலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது .பண்டாரவளை மாநகரமேயர் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட மூவருக்கு கொரோனாதொற்று அறிகுறிகள் தென்பட்டதினால், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே, கொரோனா தொற்று ஊர்ஜிதப்பட்டது. இவர்கள் சிகிச்சைகளுக்குஅனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
எம். செல்வராஜா, பதுளை