இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து துருக்கி விடுத்துள்ள அறிவிப்பு

பொதுவாக இஸ்ரேலுக்கு எதிராக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கும் துருக்கி, இம்முறை மென்மையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிலவும் மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ள துருக்கி, அந்தப் பகுதியில் விரைவில் அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வன்முறை அதிகரிப்பதால் இரு தரப்புக்கும் பலன் இல்லை” என்று கூறியுள்ளது.

“நிலைமையைக் கட்டுப்படுத்த துருக்கி எப்போதும் உதவத் தயாராக உள்ளது. இஸ்ரேலும் பாலத்தீனும் இரு நாடுகள் என்பதை நிரூபித்துள்ளது இந்த சோக சம்பவம். இந்த அணுகுமுறையின் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. வன்முறைப் பாதையை விட்டுவிட்டு நிரந்தரத் தீர்வை நோக்கிச் செயல்படுமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்,” என அதில் கூறியிருந்தனர்.

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான் பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், “1967 எல்லைகளின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் புவியியல் ரீதியாக ஒன்றுபட்ட பாலத்தீன அரசை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த பாலத்தீனத்தின் தலைநகர் ஜெருசலேம் (கிழக்கு). பாலத்தீனம்-இஸ்ரேல் மோதலை முடிவுக்கு கொண்டுவர உறுதியான தீர்வு ஒன்றே மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த முடியும்,” என எர்துவான் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles