இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 12,63158 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் மட்டும் 137,703 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் இந்தியாவில் இருந்து 27,281 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், போலந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles