200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – சாரதி படுகாயம்!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பத்திரிகைகளை ஏற்றி வந்த சிறிய ரகத்திலான லொறியொன்று (இன்று) 06-11-2020ல் அதிகாலை 4 மணியளவில் பெரகலைப் பகுதியில் பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில், குறிப்பிட்ட சிறிய ரகத்திலான லொறி சாரதி, கடுங்காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹல்துமுள்ளைப் பொலிசார், மேற்படி விபத்து குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட சிறிய ரகத்திலான லொறி, பதுளையை நோக்கி வந்துக்கொண்டிருந்த போது, பெரகலைப் பகுதியில் மலைப்பகுதியிலிருந்து கல்லொன்று லொரி மீது விழுந்ததில், அவ் லொரி தள்ளப்பட்டு, பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

பெரகலைக்கும், ஹல்துமுள்ளைக்குமிடையில் சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தே இவ் விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா

Related Articles

Latest Articles