விக்கெட் வேட்டை – கிரிக்கெட்டில் 122 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட சாதனை….!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியானது எவரும் எஎதிர்ப்பார்க்காத வகையில் முதல் நாளிலேயே 3 இன்னிங்ஸ்களை கண்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி கேப்டவுன் நகரில் நேற்று ஆரம்பமானது.

தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. 9 ஓவர்களில் 15 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் விக்கெட் வேட்டை நடத்தினார்.

உடன் பும்ரா மற்றும் முகேஷ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த 55 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணி சுருண்டது.

தென்னாப்பிரிக்க அணியை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, ரோகித் மற்றும் கில் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் சிறந்த ஆரம்பத்தை பெற்றது. பின்னர் இன்னிங்ஸை எடுத்துச்சென்ற விராட் கோஹ்லி இந்தியாவை 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துச்சென்றார். 153 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இருந்த போது, ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை அள்ளிய லுங்கி இங்கிடி போட்டியை தலைகீழாக திருப்பினார்.

46 ஓட்டங்களை பெற்றிருந்த விராட் கோஹ்லி அவுட்டாகி வெளியேற, கடைசி 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்னுக்கே இந்தியாவை சுருட்டி அசத்தியது.

98 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது தென்னாப்பிரிக்கா அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் எல்கர் மற்றும் மார்க்ரம் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் விக்கெட்டுக்கு பும்ராவும், சிராஜும் போராடிய நிலையில், டீன் எல்கரை 12 ரன்னில் வெளியேற்றிய முகேஷ் குமார் அசத்தினார். அடுத்துவந்த டோனி டேவையும் 1 முகேஷ் வெளியேற்ற, உடன் களத்திற்கு வந்த ஸ்டப்ஸை அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார் பும்ரா. தென்னாப்பிரிக்கா 62 ரன்னுக்கு 3 விக்கெட் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் 1902ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் நாளில் 23 விக்கெட்டுகளை இழந்திருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்த இரண்டாவது போட்டியாக மாறியுள்ளது. 1902ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் நாள் டெஸ்ட் போட்டியில் 25 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நேற்றைய போட்டியில் 23 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles