இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை (21) நடைபெறவுள்ளது.
தலைமைப் பதவிக்கு போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், புதிய தலைவரை வாக்கெடுப்புமூலம் தெரிவுசெய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் தலைமைப் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு இன்று திருகோணமலையில் கூடுகின்றது.
