கடவுச்சீட்டு கட்டணம் 100 வீதத்தால் அதிகரிப்பு!

இலங்கையில் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒன்லைன் மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் சாதாரண சேவைக்கான கட்டணமாக 5 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டிருந்தது.

அதேவேளை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles