கெஹலியவுக்கு வீட்டில் இருந்து உணவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டில் இருந்து உணவு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி டீ.திசாநாயக்க தெரிவித்தார்.
இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த வெள்ளிக்கிழமை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Related Articles

Latest Articles