தோட்ட குடியிருப்பில் புதையல் தோண்டிய மந்திரவாதி உட்பட நால்வர் கைது!

பெருந்தோட்டப் பகுதி குடியிறுப்பொன்றில் புதையல்தோண்டிக் கொண்டிருந்த நால்வரை ஹாலி-எல பொலிஸார் இன்று (11-11-2020) கைது செய்துள்ளனர். அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணத் தொகுதி மற்றும் பூஜைப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவர் மந்திரவாதியாவார்.

ஹாலி-எல பகுதியில் நேப்பியர் பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு குடியிறுப்பொன்றிலேயே, இவ்வாறு புதையல் தோண்டப்பட்டுள்ளது.

மலசலகூடகுழியொன்று தோண்டும் போர்வையிலேயே மேற்படி செயற்பாடு இடம்பெற்றதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles