இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.
நான்காவது கட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களிலுள்ள 45 தோட்டங்களில் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டார்.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கமைப்பின்கீழ் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.










