நுவரெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு!

நுவரெலியா , மாநகரில் அதிகரித்து வரும் கட்டாகாளி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா பிரதான நகரில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் பாவிக்கும் குறுக்கு வீதிகள் என பல இடங்களில் கட்டாகாளி நாய்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து பொது மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகின்றன. அத்துடன், பொது மக்கள் நாய்கடிக்கு இலக்காகும் அச்சுறுத்தலும் காணப்படுகின்றது.

மேலும் பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களின் அருகில் சென்று இந்த கட்டாகாளி நாய்கள் சிறுநீர் கழிப்பது , நகரில் மக்கள் பயணிக்கும் வீதிகளில் மலம் கழிப்பது என காணக்கூடிய நிலையில் நகரின் சுற்று சூழல் மாசடைவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

அதேநேரத்தில் நுவரெலியா மற்றும் கந்தப்பளை நகரங்களில் நாய்களின் இன பெருக்கத்தை அதிகரித்து வருகின்றது. இது குறித்து நுவரெலியா பொது சுகாதார பரிசோதக காரியாலயம் மற்றும் நுவரெலியா மாநகர சபை பொது சுகாதார பிரிவு பரிசோதகர்களும் அவதானித்துள்ளனர்.

அத்துடன் நகரில் அழைந்து திரியும் அனைத்து கட்டாகாளி நாய்களுக்கும் நீர் வெறுப்பு ஊசிகள் செலுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நகரில் கட்டாகாளி நாய்கள் பொது மக்களுக்கு அசௌகரீகங்களை ஏற்படுத்துவதுடன் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக நுவரெலியா மாநகர சபையில் இயங்கும் பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள் மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாவட்ட செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக அறிய முடிகிறது.

அதேநேரத்தில் நுவரெலியா நகரம் சுற்றுலா நகரம் என்பதனால் அதிகளவில் வெளி நாட்டவர்கள் வருகை தருவது வழமையாகும் இந்த நிலையில் இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கட்டா காளி நாய்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்கள் காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் நுவரெலியா வசந்த கால நிகழ்வு ஆரம்பிக்கும் முன் நகரில் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆ.ரமேஸ்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles