புசல்லாவையில் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்!
புசல்லாவை நயாபான தமிழ் வித்தியாலயம் , எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி பிரம்மாண்டமான கிரிக்கெட் திருவிழாவை நடத்துகின்றது.
போட்டியில் நயாபான, கலைவாணி, ஸ்டெலன்பேர்க் மற்றும் டெல்டா கிழக்கு ஆகிய நான்கு தமிழ் பாடசாலைகளின் அணிகள் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட உள்ளன.
நயாபான தமிழ் வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் ஒரு களமாக அமையவுள்ளது.
எந்தப் பாடசாலை அணி இந்தச் சமரில் வெற்றி மகுடத்தைச் சூடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
