கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் (04) ஆரம்பமாகவுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய முடியுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65,531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அதேவேளை, இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக முதல் முறையாக கொரிய மொழி பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.










