ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய மேலும் ஒரு வீராங்கனை ஈரான் திரும்பினார்!

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த ஐந்தாவது வீராங்கனை தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.

ஈரான் அணியின் கேப்டன் சஹ்ரா கன்பாரி என அடையாளம் காணப்பட்டுள்ள இவர், தேசபக்தி உணர்வுடன் நாடு திரும்பியதாக ஈரான் ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.

முன்னதாக, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மௌனம் காத்ததால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி ஏழு வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு கோரினர்.

தற்போது அவர்களில் இருவர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள நிலையில், மற்றவர்கள் தங்களது முடிவை மாற்றிக்கொண்டு வெளியேறிவிட்டனர்.

சக வீராங்கனைகள் நாடு திரும்புவதற்கு ஈரான் அரசின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எழுந்தகுற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய அரசு மறுத்துள்ளது.

Related Articles

Latest Articles