ரியாத்தில் அமெரிக்க தூதரகம்மீது தாக்குதல்: உரிய பதிலடி வழங்கப்படும் என்கிறார் ட்ரம்ப்!

தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் நேரடியாகக் களமிறங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா , ரியாத்திலுள்ள அமெரிக்க தூதுரகம்மீது ஈரான் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், இதற்கான பதிலடி நடவடிக்கை பற்றி அவர் விரைவில் தெரியப்படுத்துவார் எனவும் தெரியவருகின்றது.

அமெரிக்க தூதுரகம்மீதான தாக்குதலில் குறைந்த அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தேவைப்பட்டால் மட்டுமே அமெரிக்க படையினர் ; நேரடியாகக் களமிறக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles