பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றிருந்தது.
திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாராயண பெருமாள் கோயிலில் நாளை (06) நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் , ஜீவன் தொண்டமான் எம்.பியின்
அழைப்பை ஏற்று பூர்வீக இல்லத்திற்கு வருகை தந்திருந்தபோது இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இருவருக்கும் இடையில் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுடனான இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமைந்ததுடன், வருகை தந்திருந்த அவர்களுக்கு ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெவித்துக்கொண்டார்.










