அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (23) நடைபெறவுள்ளது.
இதன்போது முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக பஸ் கட்டணத்தை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பதற்குரிய யோசனைக்கு அனுமதி வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இதற்குரிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
