FIFA உலகக்கிண்ணம் – தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு

ஒக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கட்டார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிபா  உலக கோப்பை கால்பந்து 2022இல் நடைபெறவுள்ளது. அதேபோல் ஆசிய கோப்பை கால்பந்து 2020இல் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெற இருந்தது.

கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெற இருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும்.

பிபா மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.

Related Articles

Latest Articles