ரஷ்யாவில் இருந்து எரிபொருள்: கலந்துரையாடல் ஆரம்பம்!

ஈரானில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் Levan S. Dzhagaryan , வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath இன்று (13) கலந்துரையாடியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் வளை குடா நாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் விடயத்தில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவது தொடர்பில் கொழும்பு அவதானம் செலுத்தீயுள்ளது.

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தற்காலிகமாக வளர்த்தியுள்ளது.

எனவே, பல நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றன.

இலங்கையின் மேற்படி கோரிக்கை தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துக்கு உடனடியாக தெரியப்படுத்தப்படும் என ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

 

Related Articles

Latest Articles