“தேர்தலை எந்தகாலப்பகுதியில் நடத்துவது தொடர்பில் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜே.வி.பியின் செயலாளருக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ மாகாணசபைத் தேர்தல் நடக்காது என ஜே.வி.பியின் செயலாளர் கூறியுள்ளார். தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் முடிவுகளை எடுக்கலாம். ஆனால் இது விடயத்தில் ஜே.வி.பி. செயலாளருக்கு உள்ள அதிகாரம் என்ன?
நாட்டில் பொருட்கள், சேவைகள் விலைகள் அதிகரித்துள்ளன. மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், மக்கள்மீது மென்மேலும் சுமைகள் திணிக்கப்படுகின்றன.
வரிவிதிப்பு, கட்டண அதிகரிப்பு என்பவதான் நெருக்கடியை தீர்ப்பதற்கான வழியா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
எதிரணிகள் இல்லையெனக் கூறும் அரசாங்கம், முடிந்தால் தேர்தலை நடத்திக்காட்டட்டும்.” – என்றார் நாமல் ராஜபக்ச.










