2026-27 பாதீட்டில், இலங்கைக்கான பாதீட்டு உதவியை இந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக ( 43.6 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது.
இது 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 3 பில்லியன் இந்திய ரூபாவாக ( 32.7 மில்லியன் டொலர்) இருந்தது.
2024-25 ஆம் ஆண்டில் இலங்கைக்கான இந்திய உதவி 3.17 பில்லியன் இந்திய ரூபாவாக ( 34.6 மில்லியன் டொலர்) இருந்தது. பின்னர் 2025-26 ஆம் ஆண்டில் 3 பில்லியனாக திருத்தப்பட்டது.
தற்போது, 2026-27 ஆண்டுக்குக்கான நிதி ஒதுக்கீடு சுமார் 33% அதிகரிக்கப்பட்டுள்ளது.
2026-27 ஆம் ஆண்டிற்கான வெளிநாடுகளுக்கான மொத்த இந்திய உதவி 56.86 பில்லியன் இந்திய ரூபாவாக ( 620.1 மில்லியன் டொலர்) முன்மொழியப்பட்டுள்ளது.
இது 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 57.84 பில்லியன் இந்திய ரூபா ( 631.0 மில்லியன் டொலர்) ஆக இருந்தது.
2026-27 ஆம் ஆண்டில் அதிக நிதியுதவியைப் பெறும் நாடாக பூட்டான் உள்ளது. அதற்கு 22.89 பில்லியன் ரூபா ( 249.7 மில்லியன் டொலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
