ஈரானில் இடைக்கால அரசு? பாரிஸில் நடந்த முக்கிய சந்திப்பு!

இஸ்லாமிய புரட்சியையடுத்து 1979 இல் ஆட்சியை இழந்த ஈரானிய மன்னரின் மகனான ரெசா பஹ்லவி , பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஈரானில் அமையவிருக்கும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தத் தான் தகுதியானவர் என்று பஹ்லவி , உக்ரைன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார் என தெரியவருகின்றது.

அத்துடன், ரஷ்யாவுடன் ஈரான் கொண்டுள்ள இராணுவக் கூட்டணி மற்றும் உக்ரைன் போரில் ஈரானிய ட்ரோன்களின் பயன்பாடு ஆகியவை தொடர்பில் மேற்படி சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் தற்போதைய போக்கைக் கண்டித்த ஜெலென்ஸ்கி, ஒரு சுதந்திரமான ஈரானை உக்ரைன் விரும்புவதாகத் தெரிவித்தார்.

தனது நாட்டின் இறையாண்மையைக் காக்கப் போராடும் உக்ரைன் மக்களின் வலியை மற்ற நாடுகளை விடவும் ஈரான் நன்கு உணரும் என்று பஹ்லவி இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles