ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய தலைமை முந்தைய ஆட்சியாளர்களை விட அதிக அறிவுத்திறன் கொண்டதாகவும், தீவிரப்போக்கு குறைந்ததாகவும் இருப்பதாக ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.
எனினும், ஈரானுக்கு அருகிலுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்யும் வரை இந்த கோரிக்கை ஏற்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஈரான் மீது கடுமையான ராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானை பழைய கற்காலத்திற்கே கொண்டு செல்லும் அளவிற்கு அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.










