ஈரான் தாக்குதலை நிறுத்த வேண்டும்: சவுதி கடும் எச்சரிக்கை!

கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு, சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் சகித்துக்கொள்வதற்கு ஓர் எல்லை உண்டு என்று சவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அனைத்து ராணுவ பலம் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் மிகப்பெரிய எரிசக்தி நிலையம்மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையிலேயே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய கிழக்கிலுள்ள முக்கிய ஸ்தலங்களில் ஈரான் தாக்குதல் நடத்திவருகின்றது.

Related Articles

Latest Articles