யாழில் கோர விபத்து: தாயும், மகளும் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்று (21) சனிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles