lankanewsweb.org இணையத்தளத்தின் ஆசிரியராக கடமையாற்றிய சதுரங்க டி சில்வா, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும், முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம் ஊடகவியலாளரைக் கைதுசெய்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரது கணனியையும் கைப்பற்றிச்சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சதுரங்க டி சில்வா நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செய்தி ஆக்கங்களை பிரசுரித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.