லங்கா ப்ரீமியர் லீக்கின் முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் இன்று 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பலப்ரீட்சை நடத்தவுள்ளன.
கொழும்பு கிங்ஸ் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தலைமைவகிக்கின்றார். கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு குசல் பெரேரா தலைமை வகிக்கின்றார். இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இறுதிப்போட்டிகள் டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.