2026 உலகக் கிண்ணத் தொடரில் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது ஏழாவது கோலை அடித்து பிரான்ஸ் அணிக்கு வெற்றியைப் தேடித்தந்துள்ளார்.
இதன் மூலம் பராகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி (1-0) , காலிறுதியில் மொராக்கோவுடன் மோதுவதை உறுதி செய்துள்ளது.
பிலடெல்பியா மைதானத்தில் (Philadelphia Stadium) இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் இரண்டாம் பாதியில், எம்பாப்பே அடித்த பெனால்டி (Penalty) கோல் போட்டியின் முடிவை தீர்மானித்தது.
இந்த கோலின் மூலம், 2026ஆம் ஆண்டின் ‘அடிடாஸ் கோல்டன் பூட்’ (adidas Golden Boot) விருதுக்கான பந்தயத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் லியோனல் மெஸ்ஸிக்கு நிகராக எம்பாப்பே இணைந்துள்ளார்.
எனினும், அதிக ‘அசிஸ்ட்கள்’ (Assists – கோல் அடிக்க உதவியவை) வழங்கியதன் அடிப்படையில் எம்பாப்பே முன்னிலையில் உள்ளார்.
அத்துடன், மெஸ்ஸியின் உலகக் கிண்ண வரலாற்றின் மொத்த கோல் எண்ணிக்கையான 20 கோல்களை எட்ட எம்பாப்பேயிற்கு இன்னும் ஒரு கோல் மாத்திரமே தேவைப்படுகிறது.
சுற்றின் 16க்கு (Round of 16) தகுதி பெறுவதற்காக ஜெர்மனி அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி அதிர்ச்சியளித்த பராகுவே அணி, இப்போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் அணிக்கு பெரும் சவாலாக விளங்கியது.
பந்தை அதிக நேரம் தன்வசமே வைத்திருந்த போதிலும் (Possession), பராகுவேயின் ஒழுக்கமான தடுப்பாட்டத்தை (Defence) உடைக்க பிரான்ஸ் அணி பெரிதும் திணறியது.
பிரான்ஸ் வீரர்கள் தூரத்திலிருந்து அடித்த பந்துகள் எதுவும் பராகுவே கோல்கீப்பர் ஒர்லாண்டோ கில்லை (Orlando Gill) அச்சுறுத்தவில்லை.
எனினும், போட்டியின் இரண்டாம் பாதி தொடங்கியவுடன் பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
வேகமாக எடுக்கப்பட்ட கார்னர் (Corner) வாய்ப்பைப் பயன்படுத்தி உஸ்மான் டெம்பேலே (Ousmane Dembele) அடித்த பந்து கோல் வலையின் பக்கவாட்டில் பட்டு வெளியேறியது.
பிரான்ஸின் அழுத்தம் அதிகரித்ததால், மனு கோனே (Manu Kone) தூரத்திலிருந்து அடித்த சக்திவாய்ந்த பந்தை பராகுவே கோல்கீப்பர் கில் பாய்ந்து தடுத்தார்.
இறுதியில் போட்டியின் 69ஆவது நிமிடத்தில் பராகுவேயின் பலத்த தடுப்பாட்டம் உடைக்கப்பட்டது.
நடுவரால் வழங்கப்பட்ட விஏஆர் (VAR) பரிசீலனையின் பின்னர், பெனால்டி எல்லைக்குள் டெசிரே டூயே (Desire Doue) வீழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டு பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை மிக நிதானமாகப் பயன்படுத்திய எம்பாப்பே, கோல்கீப்பர் கில்லை ஏமாற்றி பந்தை கோலாக மாற்றி தனது அணியை காலிறுதிக்கு (Last eight) அழைத்துச் சென்றார்.
இதன்படி, இருமுறை உலக சாம்பியனான பிரான்ஸ் அணி, ஜூலை 9ஆம் திகதி போஸ்டன் மைதானத்தில் (Boston Stadium) நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில், தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணியை எதிர்கொள்ளவுள்ளது.
