ஹார்முஸ் நீரிணை தொடர்பான புதிய விதிகளை ஈரானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எப்ராஹிம் அசிசி அறிவித்துள்ளார்.
ஈரானின் புரட்சிக்குப் பிந்தைய நீண்டகாலப் பொறுமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி அந்த கடல்வழியைப் பயன்படுத்துவோர் ஈரானின் புதிய சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடல்சார் விதிகளில் ஈரான் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ட்ரம்ப் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் இங்குதான் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் திட்டத்திற்கு ஈரானியத் தேசிய பாதுகாப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.










