NPP போராட்டத்தின் போது காயமடைந்த நபர் உயிரிழப்பு

நேற்று (26) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்ட 61 வயதுடைய நபர் ஒருவர் கலவரத்தின் போது காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

அந்த நபர் நிவிதிகல பிரதேசத்தில் உள்ள NPP உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

போராட்டத்தின் போது 28 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று பிற்பகல் கொழும்பு 02, இப்பன்வல சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டக்காரர்கள் சுற்றி வளைக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழையவிடாமல் போலீஸார் தடுத்தனர்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் பொலிஸ் சங்கிலியை உடைத்துக்கொண்டு முன்னேற முற்பட்டபோது, குழுவைத் தடுக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டது.

NPP தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட 26 பேர் கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தீவு மற்றும் கொழும்பு கோட்டை பகுதிகளிலும் வைத்தியசாலை சதுக்கத்திலும் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவதைத் தடுக்கும் இரண்டு நீதிமன்ற உத்தரவுகள் சனிக்கிழமை (25) பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles