P2P பேரணியில் பங்கேற்ற மனோவை குறிவைத்தது பொலிஸ்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டு, சட்டத்தை மீறியுள்ள குற்றச்சாட்டின்பேரில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம், பொலிஸார் வாக்குமூலம் பெற தயாராகிவருகின்றனர்.

இது தொடர்பில் மனோக கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,

“#P2P – பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டு “சட்டத்தை மீறினேன்” என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொலிஸ் (எனது காவலர் மூலமாக) எனக்கு அறிவித்துள்ளது.

“வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறுங்கள். நேரம் தருகிறேன்.” என்று கூறியுள்ளேன்.” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles