ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தமது நாடு மத்தியஸ்தம் வகிக்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
எனவே, இரு நாடுகளும் சம்மதித்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி தரப்புடனும் பாகிஸ்தான் பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவருகின்றது.
இதற்கமைய 15 அம்ச திட்டத்துடன் அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் செல்ல தயாராக உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.










