ஜனாதிபதி – ஜப்பான் உயர்மட்டக்குழு சந்திப்பு!

 

இலங்கை-ஜப்பான் பொருளாதார உறவுகளை புதிய பாதைக்கு எடுத்துச் செல்லும், முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை (Export-Industrial Corridor) நிறுவுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, ஜப்பான் உயர்மட்டக் குழுவினர் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

ஜப்பானிய பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் Matsuo Takehiko, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Akio Isomata , ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் Fumihiko Kobayashi, ஜப்பான் அரசாங்கத்தினதும் அந்நாட்டின் தொழில்துறையையும் சேர்ந்த சிரேஷ்ட பிரதிநிதிகள் இதில் உள்ளடங்குவர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த செப்டெம்பர் மாதத்தில் ஜப்பானுக்கு மேற்கொண்ட அரச விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை (Export-Industrial Corridor) நிறுவுவதற்கான திட்டங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாட இந்நாட்டிற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், இந்த விசேட பிரதிநிதிகள் குழு வருகை தந்துள்ளது.

முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடம் (Export-Industrial Corridor) மூலம், முதன்மையாக ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட உற்பத்திகளுக்கான முதலீட்டை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், பிராந்திய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இலங்கைக்கு உள்ள அங்கீகாரம் அதிகரிக்கும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜப்பான் விஜயத்தைத் தொடர்ந்து சுமார் ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர் முதலீடு தொடர்பில் இலங்கை குறித்து ஜப்பான் அரசாங்கம் மற்றும் வர்த்தக சமூகத்தின் ஆர்வம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles