இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து அரச பதவியில் இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்றுடன் அரசுப் பதவியில் 8,931 நாட்களை பூர்த்தி செய்துள்ளார்.
இதற்கு முன்னர் சிக்கிம் மாநில முதல்வராக 24 ஆண்டுகளுக்கும் மேலாக (8,930 நாட்கள்) பதவி வகித்த பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை பிரதமர் மோடி இதன்மூலம் முறியடித்துள்ளார்.
2001 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் 2014 மே 21 ஆம் திகதிவரை பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தார்.
2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர், இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
பின்னர், 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியில் நீடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி மைல்கல் சாதனையைத் தவிர, பிரதமர் மோடியின் உலகளாவிய டிஜிட்டல் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை அவர் சமீபத்தில் பெற்றார்.
