ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக “நோ கிங்ஸ்” (No Kings) என்ற பெயரில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான மூன்றாவது கட்ட போராட்டம் சனிக்கிழமை (28) நடைபெறவுள்ளது.

ஊழல் மற்றும் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கும் வகையில், அமெரிக்கா முழுவதும் சுமார் 3,000 இடங்களில் பொதுமக்கள் திரளத் திட்டமிட்டுள்ளனர்.

இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மக்கள் எழுச்சியாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக நடைபெற்ற இரண்டு போராட்டங்களிலும் பல மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், தற்போதைய நிகழ்வு மேலும் வலுப்பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த எதிர்ப்புப் பேரணிகளை குடியரசுக் கட்சியினர் எதிர்மறையாக விமர்சிப்பதோடு, சில இடங்களில் வன்முறை தூண்டப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே போராட்டங்கள் இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles