யாழ். ஏ9 வீதி, நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியரை அருகில் இருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.