ஆசியாவிலேயே முதன்மை வீரராக ருமேஷ் தரங்க சாதனை!

இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் தற்போது 1,324 புள்ளிகளுடன் ஆசியாவிலேயே முதன்மை வீரராக உருவெடுத்து இந்திய வீரர் நீரஜ் சோப்ராவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இதன் மூலம், உலக தடகளத் தரவரிசையில் மிக உயர்ந்த நிலையை எட்டிய முதல் இலங்கை ஆண் தடகள வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

விளையாட்டுத் துறையில் இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ள இவரது இந்த வளர்ச்சி ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இலங்கையின் தடகள வரலாற்றில் இந்தச் சாதனை ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles