எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அவர்களின் நலன்கள் குறித்தும், நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் பரஸ்பரம் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினர்.
