15 ஆம் திகதி நுவரெலியாவில் சஜித் பிரச்சாரம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 15 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தே அவரது பரப்புரை அமையவுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதானக் கூட்டங்களில் பங்கேற்று, சஜித் பிரேமதாச உரையாற்றவுள்ளார்.

Related Articles

Latest Articles