ஓய்வுபெற்ற மஹிந்தவை விமர்சிப்பதைவிடுத்து நாமலுடன் மோதுங்கள்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எனவே, அவருடன் மோதுவதைவிடுத்து, அவரது மகன் நாமல் ராஜபக்சவுடன் சொற் சமரில் ஈடுபடுங்கள்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, ஆளுங்கட்சியினரை வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு ,

“ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சிக்கின்றார். ஆனால் வெளியில் மஹிந்த ராஜபக்சவைக் கண்டதும் பதுங்கி , பாசமாக பழகுகின்றார்.

முதுகெலும்பு என ஒன்று இருந்தால் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அது ஒரேமாதிரி இருக்க வேண்டும். சபையில் சீறுவதும், வெளியில் அடிபணிவதுமாக இருக்கக்கூடாது.

மஹிந்த ராஜபக்ச ஓய்வுபெற்று தற்போது வீட்டில் உள்ளார். அவரை விமர்சிப்பதில் பயன் இல்லை. அவரின் மகன் நாமல் ராஜபக்ச உள்ளார். அவருடன் சொற் சமரில் ஈடுபடுங்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles