தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உச்ச மட்டத்தில் இருப்பதாலேயே இங்கு அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. எனவே, விலை குறைக்ககூடிய சூழல் உதயமாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே விலை குறைப்பு இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.










