அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று கூறினார்.
இந்தப் போரை நிறுத்துவதற்கு ஈரான் எவ்வித முன்நிபந்தனைகளையும் அல்லது உடன்படிக்கைகளையும் அமெரிக்காவுடன் செய்துகொள்ளத் தேவையில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு சர்வதேச அரசியல் சூழலிலும் உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு போர் இன்று 4ஆவது வாரமாக நீடிக்கின்றது.
