“தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலி மாயையை தோற்றுவிப்பதற்கு கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்புகள் முற்படுகின்றன. எனினும், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலும் எதுவும் இல்லை.”
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை இல்லை. எனினும், கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்பினர், தமக்கு தேவையானவற்றை செய்துகொள்வதற்காக போலி மாயையை உருவாக்க முற்படுகின்றனர்.
முப்படையினர் மற்றும் பொலிஸார் உரிய வகையில் செயல்பட்டுவருகின்றனர். ஏதேனும் இடத்தில் குறைபாடு இருந்தால் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய இயலுமை அவர்களுக்கு உள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கமும் கரிசனை செலுத்தியுள்ளது என தெரியவருகின்றது. பாதாள குழு முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
