டிக்கோயா இரட்டைக் கொலை: ஊடகவியலாளருக்கு மிரட்டல்: பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

இரட்டைக் கொலை வழக்கில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, தனது கடமைக்கு இடையூறு விளைவித்ததோடு, தன்னை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மலையக் தமிழ் ஊடவியலாளர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும்  பாதுகாப்புச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹட்டன், டிக்கோயா நகரில் கணவன் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை, கடந்த 23ஆம் திகதி, பொகவந்தலாவை பெற்றோசோ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது தான் கைத்தொலைபேசியில் காணொளி பதிவு செய்துகொண்டிருந்ததாகவும், அப்போது ஒரு பொலிஸ் அதிகாரி கைத்தொலைபேசியே பறித்து அதில் இருந்த அனைத்து காணொளிகளையும் அழித்ததாகவும், சுயாதீன ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஸ்குமார் கூறுகிறார்.

தொடர்ந்து காணொளி பதிவு செய்தால், கொலை வழக்கில் தன்னைச் சிக்க வைத்து கைது செய்வதாக அந்த அதிகாரி அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

“ஹட்டன் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற கான்ஸ்டபிள் என்கைத்தொலைபேசியே வலுக்கட்டாயமாகப் பறித்து, அதில் இருந்த அனைத்து காணொளிகளையும் அழித்தார். நான் ஒரு உள்ளூர் ஊடகவியலாளர் எனவும், அரச தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை என்னிடம் இருப்பதாக அவரிடம் கூறி, அடையாள அட்டையை அவரிடம் காண்பித்தேன். ஆனால் என் கைத்தொலைபேசியே வலுக்கட்டாயமாகப் பறித்து, காணொளிகளை அழித்தார். அப்போது, இந்த சம்பவத்தை மீண்டும் வீடியோ பதிவு செய்தால், இந்தக் கொலையில் எனக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி, கைது செய்வேன் என அந்த அதிகாரி அச்சுறுத்தினார்.” என  ஊடகவியலாளர்  சதீஸ்குமார் கூறுகிறார்

இது தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மபாதுகாப்புச் செயலாளரிடம் இணையவழியில் முறைப்பாடு அளித்துள்ளதாகக் கூறும் சதீஸ்குமார், தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைக் காட்டியும், தனது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்திய அநீதிக்கு, அதிகாரிகள் நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

“அரச தகவல் திணைக்களத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தாலும், சம்பவ இடத்திற்குச் சென்று தகவல் சேகரிக்க பொலிஸார் அனுமதிக்கப்பதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் எனக்குத் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த அரசாங்கமும், தொடர்புடைய அதிகாரிகளும் நீதியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.”

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹாலிஎல, தெமோதரை பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான செல்லையா மனோஜ் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles