போர்க்கப்பலே அனர்த்தம்: தாக்குதல் நடத்தப்பட்டா? கடற்படை கூறுவது என்ன?

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் போர்க் கப்பலொன்றே அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த கப்பல்மீது நீர்மூழ்கி கப்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது என கடற்படை கூறியதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரியவரும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே கடற்படை ஊடகப் பேச்சாளர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ அனர்த்தத்துக்கு உள்ளான கப்பலில் இருந்தவர்களின் உயிரைப் பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது. அதனை நாம் செய்தோம்.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சில சடலங்களும் மீட்கப்பட்டன. கப்பலில் பயணித்தவர்களின் சடலமாக அவை இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். எனினும், விசாரணைகளின் பின்னரே அது பற்றி உறுதியாக தெரியவரும்.

இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள பகுதியிலேயே கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது.

அது இலங்கைக்குரிய எல்லை அல்ல என்றபோதிலும் அப்பகுதியில் ஏதேனும் அனர்த்தம் நடந்தால் மீட்பு பணியை முன்னெடுப்பதற்குரிய மனிதாபிமான கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. அதற்கமையவே நாம் செயல்பட்டோம்.

குறித்த கப்பல் எங்கிருந்து, எப்பகுதியை நோக்கிச் சென்றது, அதன் நோக்கம் என்ன என்பன பற்றிய தகவல்கள் விசாரணையின் பின்னரே தெரியவரும்.

அனர்த்தத்துக்கு உள்ளான கப்பல்மீது நீர்மூழ்கி கப்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்தாக வெளியாகும் தகவலை நிராகரிக்கின்றோம்.

அனர்த்தம் எவ்வாறு நடந்தது என்பதை உரிய தொழில்நுட்ப ஆய்வின் பின்னரே கண்டறிய முடியும். உயிர்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணி தொடர்கின்றது.” எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles