குளவிக்கொட்டு இலக்கான மூவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை வந்த எம்பிலிபிட்டியவை சேர்ந்த 20 வயது உடைய இளைஞன், 19 வயது யுவதி மற்றும் வத்தேகெதரவை சேர்ந்த 29 வயது உடைய யுவதி ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வரபட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.










