புதன்கிழமை விடுமுறை இரத்து!

 

“எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது” என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் புதன்கிழமை (ஏப்ரல் 8) முதல் அனைத்து அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவைத் துறைகள் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக, அரச சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் வாராந்தம் புதன்கிழமைகளில் இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது நிலைமைகள் ஓரளவிற்குச் சீரடைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, அரச நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுக்கும் வகையிலேயே இந்த விடுமுறையை இரத்துச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச மற்றும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களும், மாணவர்களும் வழமை போன்று கடமைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles