இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?

ஐபிஎல் தொடரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) – லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

இன்று இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் இப்போட்டி ஆரம்பமாகும்.

ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்றுபட்​டியலில் 3-வது இடத்தில் உள்​ளது.

கடைசி​யாக அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது.

ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ அணி​யின் பேட்​டிங் வரிசை இன்​னும் முழு​மை​யான ஃபார்​மிற்கு வரவில்​லை.

4 போட்​டிகளில் விளை​யாடி உள்ள ரிஷப் பந்த் 130 ஸ்ட்​ரைக்​ரேட்​டில் வெறும் 103 ரன்​கள் மட்​டுமே எடுத்​துள்​ளார்.

மிட்​செல் மார்​ஷ், எய்​டன் மார்க்​ரம், நிக்​கோலஸ் பூரன் போன்ற நட்​சத்​திர வீரர்​களும், ஆயுஷ் பதோனி மற்​றும் அப்​துல் சமத் போன்ற இளம் வீரர்​களும் ரன் குவிக்க முடி​யாமல் திணறி வரு​கின்​றனர்.

கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் முகுல் சவுத்ரி அதிரடி​யாக விளை​யாடி வெற்றி தேடிக் கொடுத்​திருந்​தார். ஆனால் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்கு எதி​ராக கடைசி​யாக விளை​யாடி ஆட்​டத்​தில் முகுல் சவுத்ரி 14 பந்​துகளில் 18 ரன்​கள் மட்​டுமே சேர்த்து ஏமாற்​றம் அளித்​தார்.

அணியின் வெற்​றிக்கு உதவவேண்​டுமெனில் அவர்​ சீரான வேகத்​தில்​ ரன்​களைக்​ குவிக்​க வேண்​டியது அவசியம்.

 

Related Articles

Latest Articles