மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இலக்குகளை தாக்குவதற்கு தேவையான உளவுத் தகல்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்கி வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், மேற்படி உளவு தகவல்களால் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஈரானின் ராணுவத் திறன் முறியடிக்கப்பட்டுவருகின்றது எனவும் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்குரிய ட்ரோன்களை ஈரான் வழங்கிவருகின்றது. இதற்கு பிரதி உபகாரமாகவே ரஷ்யா உளவு தகவல்களை வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
எனினும், ஈரானுக்கு ராணுவ ரீதியான ஆதரவு வழங்குவது குறித்து ரஷ்யா மௌனம் காத்துவருகின்றது.
ஈரான்மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதல் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
